

கோபல்ல கிராமம் -- கரிசல் பூமி தோன்றிய கதை
சற்றேறக்குறைய கட்டபொம்மனின் காலத்தில் புலம் பெயர்ந்த (ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்தமர்ந்த) கம்மாள மக்களின் வாழ்க்கை முறை, சொல்வழக்கு ஆகியவைகளை FLASHBACK முறையில் நகர்த்தும் கதை.
புலம் பெயர்ந்ததற்க்கான காரணம், அப்படி வருகயில் அவர்கள் அனுபவித்த இன்னல்கள் ஆகியவற்றை ஒரு திரைக்கதை பாணியில் சொல்கிறார். ம்னிதனுக்கு மீறிய சக்தியின் அற்புதத்தை கூறுகையில், கிராமத்து மனிதர்களின் நம்பிக்கை வெளிப்படுகிறது.
இடம் பெயர்ந்த ஒரு கூட்டம், காடாக உள்ள ஒரு இடத்தை தீயிட்டு கொளுத்தி கரிசல் நிலமாக மாற்றுவது, அதற்கு அனுபவமுள்ள பெண்களின் பங்களிப்பு, கூட்டு வாழ்க்கயின் தத்துவம், கால்நடைகளின் மேல் கொள்ளும் அன்பு, மனிதரிடத்தில் கொள்ளும் மாண்பு என்று கரிசல் கிராம மக்களின் வாழ்வை கண் முன்னே நிறுத்தி ராஜபாட்டை நடத்தியுள்ளார் கி. ராஜநாராயணன்.
அந்த கிராமத்தின் நபர் ஒவ்வொருவரின் பெயரை கூறி அதற்கு ஒரு கதையும் கூறுவது வெள்ளந்தியின் உச்சம்.
இப்படி படிக்கும் இருநூற்று சொச்ச வெள்ளைப் பக்கங்களும் கருப்பு பூமி மக்களின் காவியமாக காட்சி படுத்துகிறது கோபல்ல கிராமம்.
No comments:
Post a Comment